ஆடுகளை தேர்வு செய்தல்
ஆடுகளை நாம் கறிக்காக வளர்ப்பதால் நல்ல ஆரோக்கியமான வளமான ஆடுகளையே வாங்கி வளர்க்க வேண்டும். அந்தந்த மாவட்டத்திற்கு ஏற்ற ஆடுகளை வாங்கி வளர்க்கலாம். சினை ஆடுகளாக வாங்கினால் நாம் வாங்கியவுடன் அவற்றிலிருந்து குட்டிகளை பெறலாம். பெட்டை ஆடுகளை வாங்கும் பொழுது அவை 1 வருடம் நிரம்பியவைகளாக வாங்க வேண்டும். இளம் குட்டிகளாக வாங்கும் பொழுது 3 மாதத்திற்கு மேலான வளமான குட்டிகளை வாங்கி வளர்க்கலாம். 20 பெட்டை ஆடுகளுக்கு 1 கிடா என்ற விகிதத்தில் ஆடுகளை வளர்க்க வேண்டும். கிடாக்கள் திடகாத்திரமாகவும், பெட்டை ஆடுகளை சினைப்படுத்தக் கூடியதாகவும் இருக்க வேண்டும். பண்ணையில் கிடா ஆடுகள்தான் முக்கியமானதாகும்.
தீவனம் : ஆடுகளை மேய்ச்சலுக்கு மட்டுமே அனுப்பி வளர்த்து வருகிறோம். மழைக்காலங்களில் மட்டும் புற்கள் அதிகம் இருப்பதால் மற்ற காலங்களில் ஆடுகள் வளமாக இருக்காது. எனவே ஆடு வளர்ப்போர் தேவையான தீவனப்புற்கள் மற்றும் வேலி மசால் போன்ற தீவனப்பயிர்களை வளர்த்து ஆடுகளுக்கு கொடுக்கலாம். ஆடுகளை தினமும் ஒரே இடத்தில் மேய்க்காமல் வேறு வேறு இடங்களில் மேய்க்க வேண்டும். கோடைகாலங்களில் சுமார் 10 மணிநேரங்களாவது மேய்க்க வேண்டும். மேலும் அவைகளுக்கு அடர்தீவனமும் கொடுக்கப்பட வேண்டும். வெள்ளாடுகள் கசப்பு, இனிப்பு, உப்பு, புளிப்பு போன்ற சுவைகளை அறியும் திறன் பெற்றவை. தீவனம் சுத்தமாகவும், புதியதாகவும் இருப்பதை விரும்பும். விதவிதமான மர இலைகள், செடிகள், மற்றும் பயறு வகை பசுந்தீவனங்களை உண்ணும். ஆடுகளுக்கு பசுந்தீவனங்கள் (புற்கள் மற்றும் மரத்தழைகள்) கண்டிப்பாக கொடுக்க வேண்டும். அதாவது கோ-1, கோ-3, கினியா புற்களை கொடுக்கலாம். மேலும் மரதழைகளான வேலிமசால், சூபாபுல், அகத்தி, கிளரிசிடியா, கொடுக்காபுளி, வேப்பமரஇலை, ஆலமரம், கருவேலமரம், பூவரசு, காட்டுவாகை, பலாமரம் இலை முதலியவைகளை கொடுக்கலாம். அடர்தீவனமும் ஆடுகளுக்கு கொடுக்க வேண்டும்.
அதாவது குட்டிகளுக்கு 50 கிராம், வளரும் ஆடுகளுக்கு 100 கிராம், பெரிய ஆடுகளுக்கு 200 கிராம் என்ற அளவில் தினமும் கொடுக்க வேண்டும். குட்டிகள் பிறந்த 20 நாட்களுக்கு பிறகு சிறிது சிறிதாக புற்களை கடிக்க ஆரம்பிக்கும். பின்னர் அடர்தீவனத்துடன் பயிறு வகைப் புற்கள் அதாவது ஸ்டைலோ, வேலிமசால் போன்றவற்றை தீவனமாகக் கொடுத்து பழக்கப்படுத்த வேண்டும்.
தகவல் : டாக்டர்.ரிச்சர்ட் ஜெகதீசன், பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர், TANUVAS-புதுக்கோட்டை.
தகவல் அனுப்பியவர் : முருகன், ம சா சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், திருவையாறு
May 2, 2012
·
rameswaran ·
No Comments
Tags: ஆடு, தேர்வு செய்தல், ரிச்சர்ட் ஜெகதீசன் · Posted in: ஆடு
வங்கி நேரடிக் கடன்
வங்கி நேரடிக் கடன் (Bank Direct Linkage)
விளக்கம்: மானியம் எதுவும் இல்லாமல் வங்கிகள் நேரடியாகவே சுய உதவிக் குழுக்களுக்குக் கடன் வழங்கித் திரும்ப பெறுதலையே வங்கி நேரடிக் கடன் என்கிறோம்.
நேரடிக் கடன் பெறுவதற்கான நடைமுறைகள்:
- தரம்பிரித்தல் முடிந்தவுடன் தரம்பிரித்தல் படிவத்துடன் வங்கியை அணுகி கடன் பெறலாம்.
- குழுவின் சேமிப்பின் மடங்குகளின் அடிப்படையில் கடன் தொகை கிடைக்கும்.
- தரம் பிரித்தல் முடித்த பிறகு
முதல் கடன் ரூ. 50,000/-
2-ம் கடன் ரூ. 1,00,000/-
3-ம் கடன் ரூ. 1,50,000/-
4-ம் மற்றும் அதற்கு மேல் கடன் – குழுவின் தேவைக்கேற்ப என்ற அடிப்படையில் குறைந்தபட்சக் கடனாக வங்கிகள் வழங்க வேண்டும். - வங்கிக் கடன் பெறுவதற்கு குழுவின் தீர்மானம் முக்கியத் தேவையாகும்.
நேரடிக் கடனைப் பயன்படுத்தும் முறைகள் மற்றும் திருப்புச் செலுத்தும் முறை:
- நேரடிக் கடனை உறுப்பினர்கள் நுகர்வுச் செலவுகளுக்குப் பயன்படுத்தலாம்.
- ஒவ்வொரு உறுப்பினரும் செய்ய விரும்பும் / செய்யும் தொழிலுக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளலாம்.
- பெரும்பாலும் குறுகிய கால முறைக் கடன்களாக வழங்கப்படுகின்றன.
- நேரடிக் கடன் மூலம் பெற்ற தொகையை, அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வழங்க முடியும்.
- வங்கி நிர்ணயித்துக் கொடுக்கும் வட்டியின் அளவுக்கோ அல்லது கூடுதலாக ஒரு சதவீத வட்டியைச் சேர்த்தோ உறுப்பினர்களுக்குக் கடன் வழங்கலாம்.
- குழு உறுப்பினர்களுக்கு கடன் கொடுத்து விட்டு வசூல் செய்யும் போது அசலுடன் குறிப்பிட்ட வட்டியையும் சேர்த்தே வசூலிக்க வேண்டும்.
- வட்டி வசூல் செய்யாமல் அசலை மட்டும் வசூல் செய்து, திரும்பச் செலுத்தினால் பிறகு வட்டிக் கணக்கிற்கு தொகையைச் செலுத்த குழு சேமிப்புக் கணக்கில் எடுத்துச் செலுத்த வேண்டியிருக்கும். இதனால் தேவையற்ற பிரச்சனைகள் உருவாகும். இதனைத் தவிர்க்க வட்டியை முறையாக, சரியாகக் கணக்கிட்டு வசூலிக்க வேண்டும்.
சுழல் நிதி (Revolving Fund)
விளக்கம்: சுழல்நிதி என்பது சுய உதவிக் குழுக்களின் தொகுப்பு நிதியை மேம்படுத்தவும், நிதி மேலாண்மை, கடன் மேலாண்மைத் திறன்களை மேம்படுத்தவும் அரசுத் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் தொகையாகும். அரசால் வழங்கப்படும் ரூ. 10,000/- தொகையுடன் வங்கிகள் தங்கள் பங்குக்கும் கடனாக குறைந்தபட்சம் ரூ. 50,000/- சேர்த்து வழங்குகின்றன. சுழல்நிதிக் கடன் வசதி ரொக்கக் கடனாக சுய உதவிக் குழுக்கள் நிரந்தரமாகப் பயன்படுத்தும் வசதியாகும்.
குழுக்கள் இந்நிதியிலிருந்து எத்தனை முறை வேண்டுமானாலும் அனுமதிக்கப்பட்ட கடன் தொகைக்கு மிகாமல் கடன் பெற்றுக் கொண்டே இருக்கலாம். ஒவ்வொரு முறையும் கடன் பெற்று திரும்பச் செலுத்திவிட்டு அக்கடன் கணக்கிலேயே தொடர்ந்து கடன் பெறலாம். இதனால் தான் இக்கடன் நிதி “சுழல் நிதி”என அழைக்கப்படுகிறது.
சுழல் நிதியைப் பயன்படுத்தும் முறைகள்:
- சுழல் நிதி ரொக்கக் கடன் கணக்காக வழங்கப்படுவதால், ஒரு முறை கடன் பெற்றுத் திரும்பச் செலுத்தியவுடன் கடன் கணக்கை முடித்துக் கொள்ளக் கூடாது.
- குழுவின் ஆயுள் காலம் வரைக்கும், மீண்டும் மீண்டும் மறுகடன் முறையில் பயன்படுத்த வேண்டும்.
- பெற்றகடன் தொகை முழுவதும் செலுத்துவதற்கு முன்னரே தேவையின் அடிப்படையில் கட்டிய தொகையின் அளவில் மீண்டும் பெற்றுக் கொள்ளலாம்.
- அரசு வழங்கிய மானியத் தொகை ரூ. 10,000 /- த்திற்கு வங்கிகள் வட்டி ஏதும் எச்சூழலிலும் வசூலிக்கக் கூடாது.
- சுழல் நிதியை குழுவின் பொது நிதியுடன் ஒன்றாகச் சேர்த்தும் உறுப்பினர்களுக்கு கடன் வழங்கலாம்.
- சுழல் நிதிக் கணக்கை, குறுகிய காலக் கடனாகக் கணக்கிடக் கூடாது.
- சுழல் நிதி மானியத்தினை சுய உதவிக் குழுக்கள் முன்பு பெற்ற கடனுக்காக ஈடு செய்யக் கூடாது.
- சுழல் நிதி மூலம் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கடன் தொகைக்கு வட்டித் தொகையுடன் சேர்த்தே அசல் வசூலிக்கப்பட வேண்டும்.
- சுழல் நிதி மானியத்தைப் பெற்ற உடனே குழு உறுப்பினர்கள் அதைப் பிரித்து வைத்துக் கொள்ளக் கூடாது.
- சுழல் நிதிக் கணக்கிற்கு என குழுவில் தனியாக கணக்கு பராமரிக்கப்பட வேண்டும்.
தகவல் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை.
தொகுப்பு : கிராம வள மையம், திருவையாறு.
May 2, 2012
·
rameswaran ·
No Comments
Tags: SHG, சுய உதவிக் குழு, வங்கி நேரடிக் கடன் · Posted in: சுய உதவிக் குழு
பழுப்பு தத்துப் பூச்சி அல்லது புகையான்
பழுப்பு தத்துப் பூச்சி அல்லது புகையான் – நிலபர்வதா லூஜென்ஸ்
பூச்சியின் வாழ்க்கைச் சரிதம்
பெண் பூச்சிகள், முட்டைகளை பெரும்பாலும் இரண்டிரண்டு வரிசைகளாக இலை உறைகளிலும், இலைகளின் நடு நரம்பின் இரண்டு பக்கங்களிலும் சொருகிவிடும். ஒரு பூச்சி 650 முட்டைகள் வரையில், ஒவ்வொரு வாpசையிலும் 1-16 முட்டைகளை இடும். முட்டைகளிலிருந்து 5-7 நாட்களில் இளம் குஞ்சுகள் வெளிவரும். புகையானில் இரண்டு வெவ்வேறு விதமான பூச்சிகள் உண்டு. ஒன்று நன்றாக வளர்ந்த இறக்கைகளைக் கொண்ட பூச்சிகள். இரண்டாவது வளர்ச்சியற்ற, குறுகிய இறக்கைகளைக் கொண்டவை. வளர்ந்த இறக்கைகளைக் கொண்ட பூச்சிகள் அதிக தூரம் பறந்து சென்று புகையான் பரவக் காரணமாகின்றன. நெல் பயிரைத் தவிர சோளம், சிறு தானியங்கள், கரும்பு போன்ற பயிர்களையும் இப்பூச்சி தாக்கக்கூடியது.
பூச்சி தாக்குதலின் அறிகுறிகள்
இப்பூச்சியின் தாக்குதல் பெரும்பாலும் குறுவைப் பயிரில், பயிரின் கண்ணாடி இலைப் பருவத்தில் அதிகமாகக் காணப்படும். குஞ்சுகளும், வளர்ந்த பூச்சிகளும், தூர்களின் அடிப்பகுதியில், நீர் மட்டத்திற்கு சற்று மேலாக அமர்ந்து சாற்றை உறிஞ்சி உண்ணும். தண்டின் சாற்றுக்குழாய்த் தொகுதியுனுள் குத்தி உறிஞ்சக்கூடிய வாய்ப்பாகத்தை நேரடியாகச் செலுத்தி, சாற்றை உறிஞ்சி உண்பதோடு, அவை உட்செலுத்தும் உமிழ் நீருடன் கலந்திருக்கும் நச்சுப் பொருட்கள், தத்துப் பூச்சி எரிப்பு என்னும் இலை கரிதல் அறிகுறியையும் தோற்றுவிக்கும். இது போன்ற தத்துப் பூச்சி எரிப்பு அறிகுறி முதலில் வயலில் ஆங்காங்கே சிறிய வட்ட வட்டப் பரப்புகளாகத் தோன்றும். நாளடைவில் இது போன்ற எhpந்த பகுதிகள் விhpவடைந்து பொpய பரப்பளவில் காணப்படும். இப்பூச்சி தாக்குதலினால் செடிகளின் வேர் வளர்ச்சி குன்றி, இலைகளிலுள்ள புரதச்சத்தின் அளவும், நீரின் அளவும் மிகவும் குறைந்துவிடுகிறது. பால் பிடிக்கும் முன்னரே பயிர் கரிந்து காய்ந்துவிடும். கதிர்கள் தோன்றினாலும், அவற்றிலுள்ள மணிகள் பதராகிவிடும். இப்பூச்சிகள் நேரடியாக பயிருக்குச் சேதம் விளைவிப்பதோடு குட்டைப்புல் என்ற நச்சுயிரி நோயையும் பரப்புகின்றன. தாக்கப்பட்ட பயிர் வளர்ச்சி குன்றியும், இலைகள் சிறுத்தும், குறுகியும், புல் போன்றும் தோற்றமளிக்கும். வயலில் நடந்து செல்லும்பொழுது புகையான் தூர்ப்பகுதியில் கொசுபோல் பறப்பதைக் காணலாம்.
பூச்சிக் கட்டுப்பாடு
- அருணா, கர்நாடகா, கார்திகா, கிருஷ்ணவேணி, பி.ஒய்.3, கோ 42 போன்ற பூச்சி தாக்குதலுக்கு எதிர்த்து வளரக்கூடிய ரகங்களை பயிரிடலாம்.
- வயல் வெளிகளையும், சுற்றுப்புறங்களையும் களைச் செடிகள் மற்றும் மாற்றுப் பயிர்கள் இல்லாதவாறு பராமரிக்க வேண்டும்.
- வயலில் அதிக அளவு நீர் தேக்கி வைக்காமல், அதிகப்படியான நீரை வடித்துவிட வேண்டும்.
- ஆறு அடிக்கு ஒரு பட்டம் வீதம் இடைவெளிவிட்டு நடவு செய்து பூச்சிகளை தகுந்த முறையில் பராமரிக்க வேண்டும்.
- தேவைக்கு அதிகமான தழைச்சத்து உரங்களை பயன்படுத்துதலைத் தவிர்த்தல் வேண்டும்.
- விளக்குப் பொறி வைத்து இறக்கைகள் உள்ள பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
- அட்டைகளில் அல்லது மரப்பலகைகளில் இருபுறமும் எளிதில் காய்ந்துவிடாத ஒட்டுப் பசையை அல்லது கெட்டியான எண்ணையைத் தடவி, வயலில் ஆங்காங்கே பயிர் மட்டத்திற்கும் சற்று மேலாகத் தொங்கவிட வேண்டும். பறக்கும் அல்லது குதிக்கும் பூச்சிகள் இந்த ஒட்டுப் பசையில் ஒட்டி மடிந்துவிடும். டெல்ட்டா ஒட்டுப் பொறிகளை பயன்படுத்தியும் பூச்சிகளை அழிக்கலாம்.
- புகையான் பூச்சிகள் நாற்றங்காலில் தென்பட்டால, நாற்று பறிப்பதற்கு 10 நாட்களுக்கு முன்னர், வயலில் 2.5 செ.மீ. உயரத்திற்கு நீர் தேக்கி வைத்து 8 சென்ட் நாற்றங்காலுக்கு 1.4 கிலோ கார்போ பியூரான் 3 சத குருணையை ஒரே சீராகத் தூவ வேண்டும்.
- நடவு வயலில் பூக்கும் பருவத்திற்கு முன்னர் புகையான் தென்பட்டால், ஏக்கருக்கு மோனோகுரோட்டோ பாஸ் 400 மில்லி (அ போசிலோன் – 600 மில்லி (அ) பாஸ்பாமிடான் – 200 மில்லி வீதம் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
- நேரிடையாக மருந்தை தூர்களின் அடிப்பகுதியில் தெளிக்க வேண்டும்.
- சின்தடிக் பைரித்ரையாட், மெதில் பாரத்தியான், பென்தியான், குயினால்பாஸ் போன்ற பூச்சி மருந்துகள் உபயோகித்தலைத் தவிர்க்க வேண்டும்.
- பால் பிடிக்கும் பருவத்தில் இந்தப் பருவத்தில் புகையான் தென்பட்டால் கார்பாpல் 10 சதத் தூளை ஏக்கருக்கு 10 கிலோ வீதம் தூவ வேண்டும்.
- அறுவடைக்குப் பின்னர் வயலை நன்கு உழுது தானாகவே வயலில் விழுந்த விதைகளிலிருந்து முளைக்கும் செடிகளையும் கட்டையிலிருந்து வரும் செடிகளையும் அழிப்பதன் மூலம் புகையான் உற்பத்தியைக் குறைக்கலாம்.
தகவல்: முனைவர். மலர்வண்ணன், பூச்சியியல் துறை, MSSRF, சென்னை
May 2, 2012
·
rameswaran ·
No Comments
Tags: பழுப்பு தத்துப் பூச்சி, புகையான், மலர்வண்ணன் · Posted in: பூச்சிக் கட்டுப்பாடு - நெல்
இலைச் சுருட்டுப் புழு
இலைச் சுருட்டுப் புழு – நெஃபெலோக்ரோசிஸ் மெடினாலிஸ்
பூச்சியின் வாழ்க்கைச் சரிதம்
பெண் அந்துப் பூச்சி, தளிர் இலைகளின் அடிப்பரப்பில் 10-15 முட்டைகளை ஒரே தொகுதியாக, பெரும்பாலும் வரிசையாக இடும். முட்டைகள் வெண்மையாக இருக்கும். 6-7 நாட்களில் இளம் புழுக்கள் வெளிவரும். புழுப் பருவம் 25-30 நாட்கள் வரை நீடிக்கும். முழு வளர்ச்சியடைந்த புழு சுருட்டி வைக்கப்பட்டிருக்கும் இலையினுள்ளேயே கூண்டுப் புழுவாக மாறும். கூண்டுப் புழுக்களிலிருந்து 6-8 நாட்களில் அந்துப் பூச்சிகள் வெளிவரும். வாழ்க்கைச் சுழல் 30-42 நாட்களில் முடியும்.
தாக்குதலின் அறிகுறிகள்
முட்டையிலிருந்து வெளிவரும் இளம் புழு, உமிழ் நீர் கொண்டு உற்பத்தி பண்ணும் மெல்லிய பட்டு நூல் போன்ற இழைகளால் இலையை சுருட்டி அல்லது இலையின் நுனிப்பகுதியை அடிப்பகுதியுடன் மடக்கி இணைத்து, பின்னி அதற்குள் பாதுகாப்பாக இருந்து கொண்டு, பச்சையத்தை அரித்து உண்பதனால், பச்சையம் சுரண்டப்ட்ட பகுதிகள் வெண்மையாக மாறிவிடும். அதிக அளவு தாக்கப்பட்ட பயிரில் இலைப் பச்சையம் அதிக அளவில் அரிக்கப்பட்டு இலைகள் வெண்மையான திட்டுகளுடன் காணப்படுவதோடு, பயிர் வளர்ச்சி குன்றி, மணி பிடிப்பதும் பாதிக்கப்படுகிறது. இந்தப் பூச்சி பயிரை எல்லா வளர்ச்சிப் பருவத்திலும் தாக்கக்கூடியது. பூக்கும் பருவத்தில் பூச்சி தாக்கி, கண்ணாடி இலை பாதிக்கப்பட்டால் மகசூல் அதிகம் குறைய ஏதுவாகிறது.
கட்டுப்பாட்டு முறைகள்
- நடவு செய்வதற்கு முன்னர் இரண்டு மாட்டு வண்டி தொழுவுரத்தை வயலில் இடலாம்.
- வயல் வெளிகளில் காணப்படும் சில புல் பூண்டுகள் இப்பூச்சிக்கு மாற்றுப் பயிராகக் காணப்படுவதால், புல் பூண்டுகளை அகற்றி, வயல்வெளிகளை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும்.
- தழைச்சத்தை தேவைக்கு அதிகமாகவோ, ஒரே தடவையாகவோ போடக் கூடாது. பூக்கும் பருவத்தில் அதிக அளவு தழைச்சத்து இடுவதை தவிர்க்க வேண்டும்.
- விளக்குப் பொறிகளை வைத்து அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழிக்க வேண்டும்.
- டிரைக்கோகிரம்மா இன முட்டை ஒட்டுண்ணிகள் இப்பூச்சியின் முட்டையை தாக்கி அழிக்கக்கூடியது.
- டி.கே.எம். 2,6, ஏ.எஸ்.டி. 11 போன்ற எதிர்ப்புத் திறன் கொண்ட இரகங்களைப் பயிரிடலாம்.
- 3-5 சதம் சிறியாநங்கை கஷhயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் கரைசல் அல்லது 5 சதம் வேப்ப விதைக் கரைசலைத் தௌpத்து கட்டுப்படுத்தலாம்.
- வேப்ப இலை கொத்துகளை வயலில் ஆங்காங்கே வைக்க வேண்டும்.
- வேப்ப எண்ணெய் 300 மில்லி மண்ணெண்ணெய் 250 மில்லி மற்றும் காதி சோப் 50 கிராம் ஆகியவற்றை 160 லிட்டர் தண்ணீரில் நன்கு கலந்து காலை வேளையில் இலைப் பிணைப்புகளில் நன்கு படும்படி தளிக்க வேண்டும்.
- வேப்பங்கொட்டைத் தூளை 300-500 கிராம் 300 மில்லி மண்ணென்ணையில் 24 மணி நேரத்திற்கு ஊறவைத்து அந்த வடிநீரை 150 கிராம் காதி சோப்புடன் கலந்து காலை வேளையில் தௌpக்க வேண்டும்.
- 10 கிலோ வேப்ப இலையை விழுது போல் அரைத்து அதனை 1 லிட்டர் நீரில் ஒரு நாள் முழுவதும் ஊற வைக்க வேண்டும். பின்னர் அதை 30 நிமிடங்கள் கொதிக்க விடவேண்டும். இரவு முழுவதும் ஆற வைத்து 200 லிட்டர் நீருடன் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
- இலந்தை மரக்கிளையால் பிணைக்கப்பட்ட இலைகளை உரசி, மறைந்திருக்கும் புழுக்களை முட்களால் குத்தி அழிக்கலாம். இது போல சீமைக்கருவேல கிளைகளையும் பயன்படுத்தலாம்.
- 4 சதம் வேப்ப எண்ணெய் தெளிக்கலாம்.
- சோற்றுக் கற்றhழை சாறை தெளிக்கலாம்.
- சாம்பல் தூவலாம்.
- 300 மில்லி வேப்ப எண்ணெய், 300 மில்லி புங்கம் எண்ணெய் 150 கிராம் காதி சோப்பு ஆகியவற்றை 13 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
தகவல்: முனைவர். மலர்வண்ணன், பூச்சியியல் துறை, MSSRF, சென்னை
April 30, 2012
·
rameswaran ·
No Comments
Tags: அந்துப் பூச்சி, இலைச் சுருட்டுப் புழு, நெல், மலர்வண்ணன் · Posted in: பூச்சிக் கட்டுப்பாடு - நெல்
மாமரம் காய்க்கவே இல்லை ஏன்?
மாமரம் பெரிய மரமாக உள்ளது, ஆனால் காய்க்கவே இல்லை ஏன்?
மாமரம் என்றால் பொதுவாக பிப்ரவரி மாதம் பூ பூக்கும் காலம், அதற்கு முன் செப்டம்பர் மாதத்தில் காய்க்காத மரமாக இருந்தால் கல்டார் என்ற மருந்தை ஒரு மரத்திற்கு 15 லிட்டர் தண்ணீருக்கு 15 மில்லி அளவு கலந்து வேர் உள்ள பகுதியில் குழி எடுத்து தூரில் ஊற்ற வேண்டும் இவ்வாறு செய்வதால் மரத்தை காய்க்க வைக்கலாம்.
நிகழ்ச்சி : 19.04.2012 அன்று தாமரைக்குளம் மற்றும் சுந்தரமுடையான் விவசாயிகளின் கேள்விகளும் அதற்கான பதில்ளும்
பதில் அளித்தவர் : செந்தில் குமார், ஆலோசகர், MSSRF
தொகுப்பு : கிராம வள மையம், தங்கச்சிமடம்
April 27, 2012
·
rameswaran ·
No Comments
Tags: காய்க்கவே இல்லை · Posted in: மா மரம்
மாமரத்தில் பிஞ்சு அதிகம் பிடித்தாலும் வெம்பி, கருகி பின்னர் கொட்டிவிடுகிறது ஏன்?
20 வயதான மாமரத்தில் பிஞ்சு அதிகம் பிடித்தாலும் வெம்பி, கருகி பின்னர் கொட்டிவிடுகிறது இதனை எவ்வாறு சரி செய்யலாம்?
மாமரத்தினை பொதுவாக செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் கவாத்து செய்து சூரிய ஒளியும் காற்றோட்டமும் படுமாறு செய்ய வேண்டும். மேலும் 20 வருடமான மரம் என்பதால் உர பற்றாக்குறை இருக்கலாம். எனவே, ஒரு மரத்திற்கு 4 – 5 கிலோகிராம் காம்ப்ளக்ஸ் உரம், குப்பை 50 கிலோ, வேப்பம் பிண்ணாக்கு 3 கிலோ கலந்து மரத்தின் அருகில் குழி எடுத்து தர வேண்டும். பிஞ்சின் காம்பு கருப்பாக இருந்தால் நோய் உள்ளது என்பது அறிகுறி. அவ்வாறு இருந்தால் Score (10 லிட்டர் தண்ணீருக்கு 6 மில்லி) அல்லது Amister என்ற மருந்தை 15 லிட்டர் தண்ணீருக்கு 6 – 8 கிராம் கலந்து தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் பிஞ்சு வெம்பி கருகி உதிர்வதை கட்டுப்படுத்தலாம்
நிகழ்ச்சி : 19.04.2012 அன்று தாமரைக்குளம் மற்றும் சுந்தரமுடையான் விவசாயிகளின் கேள்விகளும் அதற்கான பதில்ளும்
பதில் அளித்தவர் : செந்தில் குமார், ஆலோசகர், MSSRF
தொகுப்பு : கிராம வள மையம், தங்கச்சிமடம்
April 27, 2012
·
rameswaran ·
No Comments
Tags: கருகி கொட்டிவிடுகிறது, மா பிஞ்சு, வெம்பி · Posted in: மா மரம்
வாழை கன்றாக உள்ளபோது அழுகிவிடுகிறது எவ்வாறு சரி செய்வது?
முதலில் அழுகிய வாழை கன்றின் குருத்தை வெட்டி எடுத்துவிட வேண்டும். பின்னர் முதல் கட்டமாக காப்பர் ஆக்சி குளோரைடு என்ற மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் 5 கிராம் என்ற அளவில் கலந்து குருத்தில் ஊற்ற வேண்டும்.
பின்னர் டிரைகோடெர்மா விரிடி 1 கிலோகிராம் 50 – 60 குப்பையுடன் கலந்து உரமாக அந்த மரத்திற்கு தரவேண்டும். இவ்வாறு உரம் கொடுக்கும் போது மண்ணில் உள்ள கிருமிகள் செத்துவிடும். மேலும் கீழ்கண்ட உர மேலாண்மை செய்ய வேண்டும்.
ஒரு ஏக்கருக்கு 3 மூட்டை என்ற அளவில் டை அமோனியம் பாஸ்பேட் (Di Ammonium Phosphate), 3 வது மாதம் 150 கிராம் யூரியா, 250 கிராம் பொட்டாஷ் போன்றவை தரவேண்டும். 5வது மாதம் குலை தள்ளிவிடும்.
நிகழ்ச்சி : 19.04.2012 அன்று தாமரைக்குளம் மற்றும் சுந்தர முடையான் விவசாயிகளின் கேள்விகளும் அதற்கான பதில்ளும்
பதில் அளித்தவர் : செந்தில் குமார், ஆலோசகர், MSSRF
தொகுப்பு : கிராம வள மையம், தங்கச்சிமடம்
April 27, 2012
·
rameswaran ·
No Comments
Tags: குருத்தழுகள், வாழை · Posted in: வாழை
தென்னை மரம் பாளை விடும்போது கத்தரி வைத்து வெட்டியது போல் வருகிறது ஏன்?
2 வயதான தென்னை மரம் பாளை விடும்போது கத்தரி வைத்து வெட்டியது போல் வருகிறது. எவ்வாறு இதனை சரிசெய்வது?
30 – 40 கிராம் குருணை மருந்தை சிறிய பாலிதீன் பையில் போட்டு பையில் சிறு சிறு துளைகள் போட்டு மரத்தின் 3வது மட்டையின் இடுக்கில் சொருகிவிட்டால் விசவாயு தாக்கி புழு இறந்து போகும். பின்னர் வேப்பம் பிண்ணாக்கு மரத்தின் அடியில் கொடுத்து வரமரம் நன்றாக வளரும்.
நிகழ்ச்சி : 19.04.2012 அன்று தாமரைக்குளம் மற்றும் சுந்தரமுடையான் விவசாயிகளின் கேள்விகளும் அதற்கான பதில்ளும்
பதில் அளித்தவர் : செந்தில் குமார், ஆலோசகர், MSSRF
தொகுப்பு : கிராம வள மையம், தங்கச்சிமடம்
April 27, 2012
·
rameswaran ·
No Comments
Tags: தென்னை, பாளை · Posted in: தென்னை
தென்னை மரத்தின் தூர் உளுத்து கொட்டுகிறது, குரும்பை உதிர்கிறது ஏன்?
5 வயதான தென்னை மரம் 2 மாதமாகத்தான் தூர் உளுத்து கொட்டுகிறது, குரும்பை உதிர்கிறது, மேலும் காய் சிறுத்து கொட்டிவிடுகிறது ஏன்?
தென்னை மரத்தின் தூர் பகுதியில் சிவப்பு கூன்வண்டு சிறு சிறு துளைகள் துளைத்து அதன் வழியாஅனைத்தையும் களிமண் வைத்து பூசவேண்டும், பின்னர் மிச்ச முள்ள அந்த ஒருதுளையின் உள்ளே உள்ள அனைத்தையும் கத்தி வைத்து நன்றாக சுரண்டி எடுத்து விட்டு அதனுள் celphos என்ற மாத்திரையை வாங்கி உள்ளே வைத்து அந்த ஓட்டையையும் களிமண் வைத்து பூசிவிட வேண்டும். அவ்வாறு செய்தால் உள்ளே உள்ள வண்டு செத்துவிடும். பின்பு மரத்தின் தூரைச் சுற்றி நல்ல தரமான வேப்பம் பிண்ணாக்கு 5 கிலோகிராம் வைத்து கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் சிவப்பு கூன் வண்டு தாக்குதலில் இருந்து தென்னை மரத்தை கட்டுப்படுத்தலாம்.
நிகழ்ச்சி : 19.04.2012 அன்று தாமரைக்குளம் மற்றும் சுந்தரமுடையான் விவசாயிகளின் கேள்விகளும் அதற்கான பதில்ளும்
பதில் அளித்தவர் : செந்தில் குமார், ஆலோசகர், MSSRF
தொகுப்பு : கிராம வள மையம், தங்கச்சிமடம்
April 27, 2012
·
rameswaran ·
No Comments
Tags: குரும்பை உதிர்கிறது, தூர் உளுத்து கொட்டுகிறது, தென்னை · Posted in: தென்னை
மல்லிகை பூவில் பூஞ்சாலை நோயை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?
மல்லிகையில் பூஞ்சான நோயை கட்டுப்படுத்துவது எப்படி
மல்லிகை பதியன் போட மண்ணை தயார்படுத்தும் மல்லிகை விவசாயிகளே! முதலில் மண்ணை நுண்கிருமி தாக்குதலில் இருந்து பாதுகாப்பது அவசியம். மண்ணை நுண்கிருமி தாக்குதலில் இருந்து பாதுகாக்க மற்றும் பூஞ்சான நோயில் இருந்து கட்டுப்படுத்த பதியன் போடும் முன் டிரைகோடெர்மா விரிடி (Trichoderma viridi) 1 கிலோகிராம், சூடோமோனாஸ் (Psuedomonas) 1 கிலோகிராம் இரண்டையும், 20கிலோ வேப்பம் பிண்ணாக்குடன் கலந்து 3 நாட்கள் வைத்து பின்னர் மண்ணுடன் கலப்பதால் மண்ணில் உள்ள நுண்கிருமிகள் இறந்துவிடும். பின்னர் காற்றின் மூலம் வரும் கிருமிகளை கட்டுப்படுத்த Saff அல்லது Combo Plus என்ற மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் 3 – 4 கிராம் அளவில் கலந்து பதியனை நனைத்து மேலும் பதியன் தூரில் நனையச் செய்ய வேண்டும். பத்து நாட்கள் இடைவெளியில் 3 முறை இதேபோல் மருந்தை தண்ணீரில் கலந்து பதியனை நனைத்து பாதுகாப்பதன் மூலம் மல்லிகையில் பூஞ்சான நோயை கட்டுப்படுத்தலாம்
நிகழ்ச்சி : 19.04.2012 அன்று தாமரைக்குளம் மற்றும் சுந்தரமுடையான் விவசாயிகளின் கேள்விகளும் அதற்கான பதில்ளும்
பதில் அளித்தவர் : செந்தில் குமார், ஆலோசகர், MSSRF
தொகுப்பு : கிராம வள மையம், தங்கச்சிமடம்
April 27, 2012
·
rameswaran ·
No Comments
Tags: பூஞ்சான நோய், மல்லிகை · Posted in: மல்லிகை பூ


