ஏடிடீ 46 நெல் – பயிரில் இலைகள் சிவந்து காணப்படுகிறது

நான் ஒரு ஏக்கரில் ஏடிடீ 46 நெல் நடவு செய்து தற்போது தண்டு உருளும் பருவத்தில் உள்ளது. இந்த நேரத்தில் நெல் பயிரில் இலைகள் சிவந்து காணப்படுகிறது, இதைக்கட்டுப்படுத்த என்ன செய்வது? [திரு. கணேசன், குழிமாத்தூர்]

  • ஒரு ஏக்கருக்கு Saaf – 250 கிராம்
  • டிரைசைக்ளோசோல் – 120 கிராம் இவற்றை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் பயிர்கள் நன்கு நனயும்படி தெளித்துவிடவும்.
  • மேலும் அடுத்த நாள் தெளிப்பதற்காக உள்ள நெல் நுண்ணூட்டம் ஒரு ஏக்கருக்கு 1/2 கிலோவை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

- திரு லெட்சுமிநாராயணன், ஆலோசகர், MSSRF

January 23, 2012 · rameswaran · No Comments
Tags: ,  · Posted in: நெல்

பயிர்க்காப்பீட்டு திட்டம்

கரும்பு, வாழை, உளுந்து, கடலை, பயறுக்கு, பாதுகாப்பு

ரபி பருவத்தில் பயிரிடப்படும் பயிர்களான கரும்பு, வாழை, உளுந்து, பயறு, கடலை ஆகிய பயிர்களுக்கு பயிர்க்காப்பீட்டு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் படி ஒவ்வொரு பயிருக்கு காப்பீடு செய்யப்படும் தொகை, செலுத்தவேண்டிய பிரிமியம், பிரிமியம் செலுத்தவேண்டிய கடைசி நாள் வருமாறு.

பயிர் காப்பீடு செய்யப்படும் தொகை 
ஏக்கருக்கு ரூ.
பிரிமியம் அளவு செலுத்த வேண்டிய
மொத்த பிரிமியம் ரூ.
கடன் வாங்கும் சிறு/குறு மற்றும் இதர
விவசாயிகள் ரூ.
கடன் வாங்காத சிறு/ குறு
விவசாயிகள் ரூ.
பிரிமியம் செலுத்த கடைசிநாள்
[நடவு அல்லது விதைத்த ஒரு மாதத்திற்குள்]
கரும்பு  56680/- 3.05 1729/- 864/- 778/-
30-06-12
வாழை  2,53,170/- 6.10 15443/- 7724/- 6950/-
28-02-12
கடலை  25409/- 2.0 508/- 254/- 229/-
15-02-12
உளுந்து  2972/- 2.0 59/- 30/- 27/-
15-02-12
பயறு  3020/- 2.0 60/- 30/- 27/-
15-02-12

கடன் வாங்கும் சிறு/குறு விவசாயிகளுக்கும் இதர விவசாயிகளுக்கும் 50 சத மான்யமும் கடன் வாங்காத சிறு/குறு சிவசாயிகளுக்கு 55 சத மான்யமும் வழங்கப்படும். ஆர்வமுள்ள விவசாயிகள் உங்கள் பகுதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலோ அல்லது உங்களுக்கு சேமிப்பு கணக்குகள் உள்ள தேசிய வங்கியிலோ பிரிமியத்தொகையை செலுத்தலாம். மேலும் விபரங்களுக்கு 9443780661 என்ற எண்ணுடன் தொடர்பு கொள்ளுமாறு பயிர்க்காப்பீட்டு திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வ.பழனியப்பன் தெரிவிக்கின்றார்.

தகவல் அளித்தவர் முருகன், MSSRF, திருவையாறு

 

 

January 23, 2012 · rameswaran · No Comments
Tags: , , , , , ,  · Posted in: விவசாயம்

வேளாண் பட்டப்படிப்பு

விவசாயிகள் சலுகைக் கட்டணத்தில் வேளாண் பட்டப்படிப்பை படிக்கலாம்!

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தொலைத்தூரக் கல்வி பட்டப்படிப்புகளை நடத்தி வருகிறது. இந்த படிப்பில் விவசாயிகள் சேர்ந்து படிக்கலாம். இப்படிப்பில் சேரும் விவசாயிகளுக்கு ஐம்பது சதவிகித கட்டண சலுகையை தமிழக அரசு அறிவித்துள்ளது என தெரிவிக்கிறார் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி மற்றும் தொலைத்தூரக் கல்வி இயக்கத்தின் இயக்குநர் முனைவர் வள்ளுவ பாரிதாசன்.

இவர் ”விவசாயிகள் மற்றும் வேளாண் துறையில் ஆர்வம் உள்ளவர்கள் முறையான வேளாண் கல்வி அறிவு பெற வேண்டும் என்ற நோக்கில் இளநிலை பண்ணைத் தொழில்நுட்ப படிப்பை அறிமுகப்படுத்தி நடத்தி வருகிறது.  இந்த படிப்பில் பயிர் உற்பத்தி, பயிர் பாதுகாப்பு, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், மனையியல், வேளாண் பொருளாதாரம் மற்றும் சந்தைப்படுத்துதல், வனவியல், கால்நடை மேலாண்மை, சிறுதொழில் முனைதல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பண்ணைப் பார்வையிடல் போன்ற பாடங்கள் இடம் பெறுகின்றன. இந்த படிப்பு மூன்றாண்டு கொண்டதாகவும், ஆறு பருவங்களை கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. விவசாயிகள் இப்படிப்பில் சேர்ந்து பல விஷயங்களை கற்றுக் கொள்ளலாம்.

இந்த படிப்பில் சேர விவசாயிகளின் வயது 27 நிரம்பியவராகவும், பத்தம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. இப்படிப்பில் சேர உள்ள  விவசாயிகளுக்கு 50% சலுகை கட்டணத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த சலுகையை விவசாயிகள் பயன்படுத்திக் கொண்டு சேர்ந்து பயன்பெற வேண்டும். ஏதேனும் சந்தேகம் இருந்தால் 94421 11058, 94421 11048, 0422 – 6611229 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொளண்டு விளக்கம் பெறலாம்” என்கிறார் வள்ளுவ பாரிதாசன்.

தகவல் தொகுப்பு: எஸ். பாஸ்கர்,  ஆலோசகர், (CSR ), MARG Ltd சென்னை.

January 23, 2012 · rameswaran · No Comments
Tags: , , , , , , , , , , , ,  · Posted in: கல்வி உதவித் தொகை

ஏடிடி 46 : வெண்கதிர் வந்துகொண்டிருக்கிறது என்ன செய்வது?

ஏடிடி 46 நடவு செய்து தற்போது கதிர் வந்துகொண்டிருக்கிறது, தற்போது பயிரில் வெண்கதிர் வந்துகொண்டிருக்கிறது இதற்கு என்ன செய்வது? [கிருஷ்ணமூர்த்தி, இலுப்பக்கோரை]

கதிர் வந்த நிலையில் நெல் பயிருக்கு ஏதும் செய்ய முடியாது, இந்த நேரத்தில் நெல் பயிரின் தாள் பகுதியில் மட்டும் செவின் 10% மருந்தை தெளித்து கட்டுப்படுத்தலாம்.

- திரு லெட்சுமிநாராயணன், Advisor, MSSRF

January 23, 2012 · rameswaran · No Comments
Tags: ,  · Posted in: நெல்

தென்னந் தோப்புகளில் மழை நீர் சேகரிப்பு

பணப் பயிரான தென்னை கோடையை தாங்கி வளரும் குணமுடையது. தென்னை சாகுபடி பரப்பளவில் தமிழ் நாடு இரண்டாவது இடத்திலும், தேங்காய் உற்பத்தியில் 3-ம் இடத்திலும் உள்ளது. இதற்கு காரணம் தோப்புகளில் தண்ணீர் சேமிப்பில் உள்ள குறைபாடுகள் தான் காரணம் என்பது தெரியவந்துள்ளது. நெட்டை ரக தென்னை மரங்கள் வருடத்திற்கு 125 முதல் 150 காய்களும், குட்டை நெட்டை மற்றும் ஒட்டு ரகம் 300 முதல் 400 வரை தேங்காய்களையும் தருகின்றது.

50 சதவீதம் மகசூல் :

தென்னை மரங்கள் ஒரு நாளைக்கு 55 லிட்டர் முதல் 65 லிட்டர் வரை தண்ணீரை பூமியிலிருந்து எடுத்து கொள்வதாக கணக்கிடப்படுகிறது. தென்னையின் வேர்கள் 250 அடிக்கு மேல் நீளமாக தண்ணீர் கிடைக்கும் இடம் தேடி செல்கிறது. மழை பெய்யும் போது தோப்பில் கிடைக்கும் தண்ணீர், நிலத்தடி நீர் மூலம் அல்லது வாய்க்கால் மூலம் பாய்ச்சும் தண்ணீர் வேகமாக ஆவியாகி சூரிய வெப்பத்தால், மேல் மண் சீக்கிரம் காய்ந்து வறண்டு விடுகிறது. இதனால் அடிக்கடி தென்னந் தோப்புகளில் தண்ணீர் பாய்ச்ச வேண்டியது உள்ளது. பூமியின் மேல் பரப்பில் சரியாக தண்ணீர் சேமிப்பு இருந்தால் தான் தென்னை மரங்கள் தேவையான அளவு நீரை எடுத்துக் கொள்கிறது என்பதும், அத்தகைய தென்னை மரங்களில் பிஞ்சுகள் அதிகம் பிடித்து மகசுல் 50 சதவீதம் அதிகரிக்கிறது என்பதும் திருவையாறில் உள்ள தென்னை ஆராய்ச்சி மையம் செய்த ஆராய்ச்சியில் தெரியவந்தது.

மண் அரிப்பு தடுப்பு:

மண் அரிப்பு தடுக்கப்பட்டு மண் வளம் பாதுகாக்கப்படுகிறது. தென்னந் தோப்புகளில் நான்கு ஓரங்களிலும் வரப்பு அமைக்க வேண்டும். மேடு பள்ளம் பார்த்து குறுக்கு நெடுக்குமாக வரப்பு அமைக்க வேண்டும். தண்ணீர் வழிந்து ஓடிவிடாமல், தடுக்க வேண்டும்.
இதன் மூலம் தென்னந் தோப்பில் உள்ள தேவையில்லாத உப்புத் தன்மை குறையும். தொடர்ந்து கிணறுகளில் ஊற்று பெருகி நீர் மட்டம் உயரும். தொடர்ந்து மழை அதிகமாக பெய்தால், தோப்புக்குள் மழை நீர் சேமிப்பு குட்டை ஒன்று அமைத்து, அதில் உபரியாக கிடைக்கும் தண்ணீரை சேமித்து வைக்க வேண்டும். அதில் மீன் வளர்த்து கூடிதல் வருமானத்தை பெறலாம். மேலும் நிலத்தடி நீர் மட்டமும் உயரும்.

கரையான்:

தென்னை மரங்களை சுத்தம் செய்து மேலுரமாக கோகோஸ் (ஆர்கானிக் உரம்) வைக்கும் போது விழும் மட்டைகள், மற்ற மரங்களில் உள்ள தழைகள்,காய்ந்து விழும் சருகுகள் ஆகியவற்றை எரிக்காமல், தென்னை மரங்களின் தூர் பாகத்தை சுற்றி 2 அல்லது 3 அடுக்குகள் போட வேண்டும். கரையான் மருந்தை 10 பங்கு மணலில் கலந்து லேசாக தூவி கரையானை கட்டுப்படுத்த வேண்டும்.வண்டல் மண், தொழு உரம், மூன்று கூடை அளவு தூவி விடவும். ஓரு மட்டை மக்கும் போது அதிலிருந்து சுமார் 7 கிலோ எரு கிடைக்கிறது.

மண் புழு உரம்:

தென்னை மரத்தை சுற்றி ஓலை மட்டை பரப்பிய இடத்தை 100 நாட்களுக்கு பிறகு சோதனை செய்து பார்த்தால், ஏராளமான மண் புழுக்கள் தெரியும். கழிவு மட்டை, மக்குகளை சாப்பிடுவதற்காக மண் புழுக்கள் தென்னை மரங்களை சுற்றி குடி வந்துள்ளதை அறிய முடிகிறது. ஓரு மண் புழு ஓரு நாளைக்கு சுமார் 52 முறை பூமிக்குள் 1 அடி ஆழம் வரை சென்று வருகிறது.
காற்றில் 78 சதவீதம் நைட்ரஜன் உள்ளது. இது இடி,மின்னல் ஏற்படும் போது, உண்டாகும் வெப்பத்தால் தாக்கப்பட்டு ‘நைட்ரிக் ஆக்சைடு ‘ ஆகிறது. பின்னர் மழைநீருடன் கலந்து நீர்த்த நைட்ரிக் அமிலமாக மண்ணில் கலக்கிறது. நமக்கு தெரியாமல் பூமியில் நடக்கும் நுண்ணுயிர் கிரியையால் தழைச்சத்தாகி அதனை தென்னை மரங்கள் எடுக்கிறது. மழை காலத்தில் மழை நீருடன் யூரியா கரைசல் கலந்து, பூமியில் விழுவதால் புல். பூண்டுகள், பயிர்கள் பச்சை பசேல் என காட்சி அளிக்கிறது.

மழைநீர் சேமிப்பு:

மழை பெய்யும் போது, தென்னை மரம் வழியாக தண்ணீர் வழிந்து இறங்கி தூர் பகுதியில் மழைநீர் சேமிக்கப்படுகிறது. மட்டை,ஓலை, கழிவுகள் பரப்பி இருப்பதால், கடுமையான வெயில் அனல் காற்றில் இருந்து வரும் வெப்பதை கூட சருகுகள் தாங்கி கொள்கிறது. மேலும் வெப்பம் ஊடுருவது தாக்கப்பட்டு ஈரம் பாதுகாக்கப்படுகிறது. இதனால் பூமி குளிர்ச்சியுடன் இருக்கும். மழை நீருடன் கலந்து வந்த நைட்ரஜன் நிலை நிறுத்தப்பட்டு தென்னை மரங்களில் வேர்கள் உறிஞ்சுகின்றன.

கழிவுகள்:

உரி மட்டை, உரி மட்டை தூள், உமி, மரத்தூள், இழை, தழைகள், வாழை, தாழை, கரும்பு சக்கை சருகுகள் என்று ஒரத்தில் ஒதுக்கும் கழிவுகள் அனைத்தையும் தென்னை மரங்களை சுற்றிலும் இரண்டு அடுக்குகள் போட்டு, தென்னந் தோப்புகளில் மழை நீர் சேமிப்புக்கு பயன்படுத்தலாம்.இதனால் சுற்றுப் புற சூழல் பாதுகாக்கப்படுகிறது.

தண்ணீர் பற்றாக்குறை உள்ள இடங்களில் ரசாயன உரங்கள் கொடுப்பதை தவிர்க்கவும்,மேல் உரமாக மட்டை இடுக்குகளில் ஆர்கானிக் உரமான கோகோஸ் உர மருந்தை பயன்படுத்தவும். இதன் மூலம் பிஞ்சு பூ உதிர்வதை தடுத்து அதிக அளவு மகசூலினை பெறலாம்.

தகவல் : வா.செ. செல்வம், தென்னை ஆராய்ச்சியாளர், திருவையாறு.

தகவல் அளித்தவர் முருகன், MSSRF, திருவையாறு

January 23, 2012 · rameswaran · No Comments
Tags: , , , ,  · Posted in: தென்னை

21.01.2012 முதல் 25.01.2012 வரை

மாவட்ட வானிலை சார்ந்த வேளாண் அறிக்கை

Agro met Advisory Bulletin regularly posting with the help of India Meteorological Department (IMD) for the Tamil Nadu districts (தமிழ் மற்றும் ஆங்கிலம்).

தமிழகத்தில் உள்ள அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நகப்பட்டிணம், கரூர், பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை,   இராமநதபுரம், சென்னை, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், தேனி,   சிவகங்கை மற்றும் விழுபுரம்  பகுதிகளுக்கு.

அரியலூர் தஞ்சாவூர்
Ariyalur FRI 20.01.12 TamilAriyalur FRI 20.01.12 English Thanjavur FRI 20.01.12 TamilThanjavur FRI 20.01.12 English
திருவாரூர் நகப்பட்டிணம்
Thiruvarur FRI 20.01.12 TamilThiruvarur FRI 20.01.12 English Nagai FRI 20.01.12 TamilNagai FRI 20.01.12 English
கரூர் பெரம்பலூர்
Karur FRI 20.01.12 TamilKarur FRI 20.01.12 English Perambalur FRI 20.01.12 TamilPerambalur FRI 20.01.12 English
திருச்சி திண்டுக்கல்
Trichy FRI 20.01.12 TamilTrichy FRI 20.01.12 English Dindugul FRI 20.01.12 Tamil
புதுக்கோட்டை இராமநதபுரம்
Pdk FRI 20.01.12 Tamil Ramanathapuram FRI 20.01.12 Tamil
சென்னை திருவள்ளூர்
Chennai FRI 20.01.2012 English Thiruvallur FRI 20.01.2012 English
வேலூர் திருவண்ணாமலை
Vellore FRI 20.01.2012 English Thiruvananamalai FRI 20.01.2012 English
கடலூர் விழுபுரம்
Vellore FRI 20.01.2012 English Villupuram FRI 20.01.2012 English
காஞ்சிபுரம்  தேனி
 Kanchee FRI 20.01.2012 English Theni FRI 20.01.12 Tamil
 சிவகங்கை 
Sivaganga FRI 20.01.12 Tamil

January 21, 2012 · rameswaran · No Comments
Tags: , , , , , , , , , , , , , , , , , , ,  · Posted in: VRCs & VKCs Activities, வேளாண் வனிலை அறிக்கை

MSSRF-NVA Publications Produced by One World South Asia

The following publications (Books) were produced by OneWorld South Asia (2004-2005) which is one of the Mission 2007 / GGA partner organizations with the support of SDC, DFID and MSSRF.

  1. Information Kiosks in Every Village by 2007: Myth or Reality, (Published Year 2004)
  2. The March Towards A Knowledge Revolution: Needs, Challenges and Mechanisms – Policy Makers Workshop – July 2004 (Published Year 2004)
  3. Mission 2007: Overcoming the Pilot Syndrome – July 2005, (Published Year 2005)
  4. National Alliance on Mission 2007: Steering Committee Meeting – February 2005 (Published Year 2005)
  5. A National Alliance on ICTs for Basic Human Needs – Policy Recommendations, 11 July 2005 (Published Year 2005)

January 20, 2012 · rameswaran · No Comments
Tags: , , ,  · Posted in: VRCs & VKCs Activities

List of NVA Brochures

The following brochures were brought out by different arms of Jamsetji Tata National Virtual Academy (NVA)

  1. Knowledge System for Sustainable Food Security (Published Year 1999)
  2. Rural Knowledge Centres – Reaching the Unreached (Published Year 2003)
  3. மீனவவர்களின் குரலைக் கேளுங்கள் – புதுச்சேரி கிராம வள மையம் (Published Year 2003)
  4. Voice of the Fishing Community (Published Year 2003)
  5.  தென்னை விவசாயிகளின் குரலைக் கேளுங்கள் – புதுச்சேரி கிராம வள மையம் (Published Year 2004)
  6. Harnessing the tools of the Space Age for Rural Transformation (Published Year 2004)
  7. National Consultation on The Role of Panchayati Raj Institutions in spearheading a Rural Knowledge Revolution (Published Year 2005)
  8. ஒருங்கிணைந்த பூச்சி கட்டுப்பாடு செம்பான் சிலந்தி – புதுச்சேரி கிராம வள மையம் (Published Year 2005)
  9. கிராமபுற பொருளாதார மேம்பாட்டிற்கான கலப்பு பண்ணை திட்டக் கையேடு – அன்னவாசல் கிராம வள மையம் (Published Year 2005)
  10. திருந்திய நெல் சாகுபடி – புதுச்சேரி கிராம வள மையம் (Published Year 2005)
  11. புதுச்சேரியில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு கண்ணோட்டம் – புதுச்சேரி கிராம வள மையம் (Published Year 2005)
  12. சுத்தமான பால் உற்பத்தி மற்றும் தரமான பால் கொள்முதல் – புதுச்சேரி கிராம வள மையம் (Published Year 2005)
  13. ஆதாயம் தரும் ஆடு வளர்ப்பு – புதுச்சேரி கிராம வள மையம் (Published Year 2005)
  14. வான்கோழி வளர்ப்பு – புதுச்சேரி கிராம வள மையம் (Published Year 2005)
  15. கைநிறைய சம்பாதிக்க கரறவை மாடு வளர்ப்போம் – புதுச்சேரி கிராம வள மையம் (Published Year 2005)
  16. சுத்தமான மற்றும் தரமான பால் உற்பத்தி பயிற்சி கையேடு – புதுச்சேரி கிராம வள மையம் (Published Year 2005)
  17. உணவுக்காளான் வளர்க்கும் முறை – (சிப்பிக் காளான்) – புதுச்சேரி கிராம வள மையம் (Published Year 2005)
  18. Jamsetji TATA National Virtual Academy (Published Year 2007)
  19. First National Virtual Congress of Mahila Kisans, 95th Indian Science Congress, Andhra University, 5th January 2008 (Published Year 2008)
  20. பாசன நீரின் உகந்த தன்மையும் அதன் பாசன நில பராமரிப்பும் (Published Year 2008)
  21. பாசன நீர் பரிசோதனை (Published Year 2008)
  22. மண் பரிசோதனையின் முக்கியத்துவம் (Published Year 2008)
  23. Appreciation of the effectiveness of INCOIS information to save lives on sea and livelihoods of fisher folk (Published Year 2009)
  24. Jamsetji TATA National Virtual Academy (NVA) – Catalyst of Rural Knowledge Revolution (Published Year 2009)

January 20, 2012 · rameswaran · No Comments
Tags: ,  · Posted in: VRCs & VKCs Activities

List of NVA Publications

The following publications (Books) produced by different arms of Jamsetji Tata National Virtual Academy (NVA)

  1.  Towards a Knowledge Revolution in Rural India, MSSRF-TATA Virtual Academy for Food Security and Rural Prosperity – Concept and Operational Plan, (Published Year June 2003)
  2. Rural Knowledge Centres: Harnessing Local Knowledge via Interactive Media – Policy Makers Workshop, 8-9 October 2003, Chennai, (Published Year 2003)
  3. Towards a Rural Knowledge Revolution – Mission 2007:Every Village a Knowledge Centre – A Road Map, (Published Year 2004)
  4. National Alliance for Mission 2007: Every Village a Knowledge Centre – Mobilising the Power of Partnership, (Published Year 2004)
  5. Reaching The Unreached and Voicing the Voiceless – A Study on Impact of Namma Ooru Seidhi, a Community Newsletter in Pondicherry, (Published Year 2005)
  6. Village Knowledge Centres in Pondicherry – An Anthropological Perspective, (Published Year 2005)
  7. Toolkit for setting up – Rural Knowledge Centres (RKC), (Published Year 2005) Version (Tamil & English)
  8. The Second – MSSRF South – South Exchange Travelling Workshop, 30 October -6 November 2003, Pondicherry & Tamil Nadu, India, (Published Year 2005)
  9. The Third – MSSRF South – South Exchange Travelling Workshop, 15-22 October 2004, Tamil Nadu & Pondicherry, India, (Published Year 2005)
  10. Partners Directory – National Alliance for Mission 2007: Every Village a Knowledge Centre Mobilising the Power of Partnership, (Published Year 2006)
  11. Directory of NVA Fellows – Profile and Core Competencies Volume 1, July 2005 – February 2007, (Published Year 2007)
  12. Directory of NVA Fellows – Profile and Core Competencies Volume 2, (Published Year August 2007)
  13. Transformation Lives with ICTs – Vignettes from Villages in Thiruvaiyaru, Tamilnadu, (Published Year 2007)
  14. The Torch Bearers of the Rural Knowledge Revolution – Jamsetji Tata National Virtual Academy for Rural Prosperity (NVA) Fellows A Few Case Studies, Tamilnadu, (Published Year 2007)
  15. Jamsetji Tata Training School for Leadership in Rural Knowledge Connectivity (JTS), (Published Year 2007)
  16. National Consultation on Content Creation and Capacity Building for Village Resource Centers (VRCs), 19th-20th January 2007, Arya Vaidya Sala, Kottakkal, Kerala, (Published Year 2007)
  17. Workshop on Strengthening the Linkages of Different ICT4D Models, 22-23 June 2007, Chennai, (Published Year 2007)
  18. Achieving Convergence with National Missions and Other Initiatives – Third Convention of the National Alliance, IIT, Chennai 28-29 July 2006, (Published Year 2007)
  19. Digital Inclusion for Rural Transformation, (Published Year 2007)
  20. Transition to a Knowledge Society: Grameen Gyan Abhiyan – Fourth Annual Convention, National Alliance for Mission 2007, (Published Year 2008)
  21. Architecture of Inclusive Growth – Report of 5th Convention of Grameen Gyan Abhiyan, 3-5, October 2008 (Published Year 2009)
  22. Human Dimensions of ICT in Rural India – Reflections by Rural Women and Men (Case Studies from Annavasal, Sempatti, Thangachimadam and Thiruvaiyaru – Tamil Nadu) (Published Year 2009)
  23. National Technology Day – Video Conference Presentations, 11 May 2009 (Published Year 2009)
  24. Proceedings of the Virtual Congress on – Celebrating Women’s Contributions to Safeguarding and Strengthening Ecological Security, 6 June 2009 (Published Year 2009)
  25. Directory of NVA Fellows – Profile and Core Competencies Volume 3 (Published Year 2009)
  26. Climate Literacy for Sustainable Food & Water Security – Report of a National Workshop on Role of Gyan Choupals in Spreading Climate Literacy & Building Sustainable Food & Water Security Systems, September, 2-3-2009 (Published Year 2009)
  27. Partners Directory 2009 – Grameen Gyan Abhiyan – Rural Knowledge Movement (Published Year 2009)
  28. Transformative Impact of ICT – Change stories from rural India (Published Year 2010)
  29. Reaching the Unreached – Community based Village Knowledge Centres & Village Resource Centres (Published Year 2010)
  30. General Management of Village Knowledge Centre: Training cum Learning Manual), (Published Year December 2010) [கிராம அறிவு மையம்: பொது மேலாண்மை பயிற்சிக் கையேடு] Version (Tamil)
  31. Mahatma Gandhi National Rural Employment Guarantee Act Guide for beneficiary (Published Year 2010) Version (Tamil)
  32. Mahatma Gandhi National Rural Employment Guarantee Act Guide for Village President (Published Year 2010) Version (Tamil)
  33. Evolution of a Village knowledge Centre Under Extraordinary Conditions: Case Study of Tsunami Affected Akkaraipettai Village (Published Year 2010)
  34. Directory of NVA Fellows – Profile and Core Competencies Volume 4 (Published Year 2010)
  35. Training Manual Preparation of Value Added Fish Products (Published Year 2011) Version (Tamil)
  36. Hand Book on Government Schemes for Fisher Folk (Published Year 2011) [மீனவ சமுதாயத்திற்கான அரசு நலத்திட்டங்கள் விளக்க கையேடு] Version (Tamil)
  37. Report Seventh Convention of Grameen Gyan Abhiyan –“Information Communication Technology and Food, Health and Livelihood Security in an Era of Climate Change” (Published Year 2011)
  38. INCOIS-MSSRF Season Based Fish Catch Calendar (Published Year 2011)
  39. The Fisher Friend Mobile Application – Case studies on Effective Use of Ocean State Forecast and Potential Fishing Zone for a Better Livelihood (Published Year 2011)
  40. Training Manual on Practical Application of Global Positioning System (GPS) for Fisher Folk (Published Year 2012) [ஜிபிஎஸ் - மீனவவர்களின் நண்பன் செயல்முறை விளக்க கையேடு] Version (Tamil)
  41. Training Manual on Hygienic Handling of Marine Fish in Boats and Landing Centres for Fisher Folk (Published Year 2011) [படகுகள் மற்றும் துறைமுகங்களில் மீன்களை சுகாதார முறையில் கையாளுதல் குறித்த மீனவர்களுக்கான பயிற்சிக் கையேடு] Version (Tamil)
  42. Hand Book on Maintenance and Repair of Diesel Engines installed in Fibre Boats and Catamarans for Fisher Folk (Published Year 2011) [கட்டுமரம் மற்றும் பைபர் படகுகளில் பொருத்தப்பட்டுள்ள டீசல் எஞ்சின் பராமரிப்பு மற்றும் பழுதுபார்த்தலுக்கான மீனவர்களுக்கான விளக்க கையேடுVersion (Tamil)
  43. Handbook For Computer Hardware (Published Year 2011) [கணினி வன்பொருள் பயிற்சி கையேடு] Version (Tamil)
  44. Integrated Village Development Through Knowledge Empowerment: The experiences of Agalankan Village (Published Year 2011)

January 20, 2012 · rameswaran · No Comments
Tags: , ,  · Posted in: VRCs & VKCs Activities

மா பூக்கும் காலம்!

மா மரம் பூ பூத்து குலுங்கும் காலம். சில மரங்களில் நிறைய பூவோடும், சில மரங்களில் பூ குறைவாகவும் இருக்கும். இதுபோல் குறைவாக பூ பூத்து இருக்கும் மரங்களில் அதிகளவில் பூ பூப்பதற்கு சில முறைகளை கையாண்டு பார்க்கலாம். வயலுக்கு பயன்படுத்தப்படும் யூரியாவை ஐந்து கிராம் எடுத்து ஒரு லீட்டர் நீரில் கரைத்துக் கொள்ள வேண்டும். ஐந்து கிராமுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அப்படி அதிகமாக எடுத்துக் கொண்டால் இலை கருகவும் வாய்ப்பு இருக்கிறது. ஆகையால் கவனத்தோடு செயல்படவும். இவ்வாறு கரைத்த நீரை தெளிக்கவும். குறிப்பிட்ட காலத்தில் நிறைய பூ பூக்கும்.

ஏற்கனவே பூ பூத்துள்ள மரங்களில் உள்ள பூக்கள் கொட்டாமல் தடுக்கவும் வழி இருக்கிறது. இதற்கு பிளானபிக்ஸ் என்ற மருந்தை வாங்கி 4 மிலி எடுத்து பத்து லிட்டர் நீரில் கலந்து மரம் நனையும் படி தெளிக்கவும். இதன் மூலம் மா பூ கொட்டுதலை தடுக்கலாம்.

உங்களுக்கு பயிர் சார்ந்த சந்தேகம் இருந்தால் உடனே வேளாண் உதவி தொலைபேசி எண்களான 9791278194 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்.

தகவல்: செந்தில் குமார், ஆலோசகர், MSSRF

January 18, 2012 · rameswaran · No Comments
Tags: , , ,  · Posted in: மா மரம்


Powered By Indic IME